வட சென்னை மாவட்டம் லாலா குண்டா பகுதியில் குடிபோதையில் பெண்களை கேலி செய்து இழிவுபடுத்திய தமுமுக வினரை தட்டிக் கேட்டதால் எஸ்.டி.பி.ஐ யினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. லாலாகுண்டா பகுதியில் உள்ள எஸ்.எம். தெருவில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அப்பகுதியில் செல்லும் பெண்களை த.மு.மு.க கும்பல் கேலி செய்து வந்தது. அதே போல் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அப்பகுதியில் வரும் பெண்களை இடிப்பது, கேலி செய்வது போன்ற ஈன செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து பொதுமக்கள் பலர் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை அணுகி புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (24/06/2012) அங்கு சென்ற எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர்கள் ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர்கள் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை தாக்கியதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
![]() |
தாக்குதலுக்கு ஆளான நியமத்துல்லாஹ் மற்றும் நெளஷாத் |