Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Thursday, November 29, 2012

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சமுக மேம்பாட்டு துறையின் சார்பாக திருமண உதவி வழங்கப்பட்டது .


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சமுக மேம்பாட்டு துறையின் சார்பாக 29.11.2012 அன்று திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் திருமண உதவியாக ரூ 15000 வழங்கப்பட்டது .இதை மாவட்ட தலைவர் s.அமீர் பாஷா அவர்கள் வழங்கினார்.

Wednesday, November 28, 2012

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சமுக மேம்பாட்டு துறையின் சார்பாக இரு சக்கர மோட்டர் வாகனம் வழங்கப்பட்டது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக திருச்சியில் தொழில் செய்ய ஒரு நபருக்கு இரு சக்கரம் வாகனம் வழங்கப்பட்டது

Thursday, November 8, 2012

மேட்டுப்பாளையத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்: அரசு பேருந்து எரிப்பு!


Mettupalayam-in-Coimbatore

மேட்டுப்பாளையம்:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸின் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மக் கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து இரும்புகம்பியால் தாக்கியது. இதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.