30 Apr 2012
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் நடத்தும் அமைதியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் ஒன்று திரளவும், சொந்த உணர்வுகளை வெளிப்படுத்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது. அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தையும், போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் அடக்கி ஒடுக்குவதை உடனே நிறுத்தவேண்டும் என்று ஸ்விட்சர்லாந்தைச் சார்ந்த பீட்டர் கேட்டன் உள்பட ஆம்னஸ்டியின் மூத்த உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.