Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Saturday, March 5, 2011

பலஸ்தீன் மஸ்ஜிதைத் தாக்கிய யூத ஆக்கிரமிப்பாளர்கள்

கடந்த வியாழக்கிழமை (03.03.2011) அதிகாலையில் தீவிரவாத யூத ஆக்கிரமிப்பாளர்கள் அல் கலீல் பிரதேசத்தில் உள்ள நபி யூனுஸ் மஸ்ஜிதைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் ஒத்துழைப்போடு ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான தீவிரவாத யூத ஆக்கிரமிப்பாளர்கள் தல்மூதிய வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டதோடு, மஸ்ஜிதைக் கற்களாலும் பிற ஆயுதங்களாலும் தாக்கினர். அத்துடன், உள்ளூர் பலஸ்தீனர்களைப் புண்படுத்தும் வகையில் உரத்த குரலில் திட்டித் தீர்த்துத் தம்மை எதிர்க்க வருமாறு சவால் விடுத்துள்ளனர். எனினும், அவர்கள் தம்மை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க முனைவதை உணர்ந்தவர்களாய் உள்ளூர்வாசிகள் பொறுமை காத்துள்ளனர்.


யூதச் சடங்குகள் யாவும் சுமுகமாக நிறைவேற்றப்படும்வரை நபி யூனுஸ் மஸ்ஜித் அமைந்துள்ள நகரத்தின் பிரதான நுழைவாயில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பல மணிநேரம் மூடப்பட்டு பலத்த காவல் போடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், அல் கலீல் நகரத்தின் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் கடையொன்றை முற்றுகையிட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், அதன் உரிமையாளர்களான இரு பலஸ்தீன் சகோதரர்களைக் கைதுசெய்துள்ளதோடு, அவர்களுக்குச் சொந்தமான கார் மற்றும் வாகன உதிரிப் பாகங்களையும் கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.
                                                                                                               நன்றி 
                                                                                                          இந்நேரம்

Wednesday, March 2, 2011

பயங்கரவாதி சுனில் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் கொன்றது ஏன்?

"அண்மைக்காலமாக இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள்  வலது சாரி இந்துத்துவா அமைப்புகளே  நிகழ்த்தியது" என்று சுவாமி அசிமானந்தா என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தது தெரிந்ததே. இந்தச் சதிச் செயல்களின் மூளையாக இருந்த ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்ற பயங்கரவாதியைக்  கொன்றதற்காக பெண் சாமியாரும் அபினவ் பாரத் என்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை பயங்கரவாத அமைப்பின் அமைப்பாளருமான பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் கைது செய்யப்பட்டிருந்தார்.
சுனில் ஜோஷி கைது செய்யப்படும் பட்சத்தில் அவனால் பெரும் தலைவலி ஏற்பட்டு, சில உயர்தலைகள் சிக்க நேரிடும் என்பதாலும், அவனை விட்டுவைப்பது இன்னும் பல குண்டுவெடிப்புகளை வெளிச்சப்படுத்தும்,அது நல்லதல்ல என்பதாலும் சுனில் ஜோஷி "நீக்கப்பட்டதாக" பலதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஃதன்றி,  தேவாஸ் நகர காவல் துறை,  குற்றப்பிரிவு மாஜிஸ்திரேட் பத்மேஷ் ஷா முன்பு தாக்கல் செய்துள்ள 432 பக்க குற்றப்பத்திரிக்கையில், "சுனில் ஜோஷியின் ஆணிய மனப்பான்மையினை ஒரு பெண்ணாகிய தன்னால் சகித்துக்கொள்ள இயலாததாலேயே தான் எரிச்சலடைந்ததாக" பிரக்யாசிங் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் 'சங்க'ப்  பணத்தை கையாண்ட விதமும் அவன் கொலைக்குக் காரணம் என்று தெரிவிக்கிறது.

தாகூர், ஆனந்த ராஜ் கட்டாரியா, ஹர்ஷத் சோளங்கி,  வாசுதேவ் பார்மர்,  மற்றும் ராமச்சந்திர பட்டேல் ஆகியோர் மீது குற்றப் பிரிவு 302 (கொலை ) மற்றும்  120B (குற்றச் சதி ), ஆயுதத் தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட பல பிரிவுகளில் குற்றம் சுமத்துகிறது அந்தக் குற்றப் பத்திரிகை.
                                                                                                        நன்றி 
                                                                                                   இந்நேரம்