Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, February 18, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



திருச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் திருச்சியில்  " யூனிட்டி மார்ச் " என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான S.P.நஸ்ருதீன்  துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது சரியாக 3 மணியளவில் மரக்கடை ஸ்டார் தியேட்டர் அருகில்  துவங்கி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலையில் நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும்  பொதுக் கூட்டம் நடைபெற்றது.


இப்பொதுக் கூட்டத்திற்கு மாநில செயலாளர் S.இல்யாஸ்  தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா  வரவேற்புரை ஆற்றினார் .  SDPI கட்சியின் மாநில செயலாளர் செய்யது இபுராஹீம் மற்றும் மதுரை , பெரம்பலூர் , புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்கள் , செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

ஒற்றுமை கீதம் பாடும் போது 


மாநில செயலாளர் S.இல்யாஸ் தலைமையுரையாற்றிய போது 


பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் A.முஹைதீன் அப்துல் காதர்  ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .

மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் சிறப்புரையாற்றிய போது 


திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளை சார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள்  பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் 

 

நிகழ்ச்சியின்  நிறைவாக  பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M.அபுபக்கர் சித்திக் நன்றியுரையாற்றினார் . தஞ்சை மாவட்ட தலைவர் ஜர்ஜீஸ்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .

Saturday, February 16, 2013

திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேரடி ஒளிப்பரப்பு


திருச்சி,தாம்பரம் மற்றும் நாகர்கோவிலில் 17.02.2013 அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெற 
இருக்கும் " பாப்புலர் ஃப்ரண்ட் தினம் " மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேரடி 
ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .



திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.pfitrichy.blogspot.com

www.popularfrontnellai.com

www.popularfronttn.org

காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://www.ustream.tv/channel/pfikanchi

நாகர்கோவிலில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி மற்றும்
பொதுக்கூட்டத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://ibwnews.in/live_video_details.php?video

Tuesday, February 5, 2013

திருச்சியில் பாப்புலர் ப்ரண்ட் யுனிட்டி மார்ச் சம்பந்தமாக நடந்த ஆழ்வார் தோப்பில் நடந்த மெகாபோன் பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம்.


04 feb:திருச்சியில் பாப்புலர் ப்ரண்ட் யுனிட்டி மார்ச் சம்பந்தமாக நடந்த ஆழ்வார் தோப்பில் நடந்த மெகாபோன் 

பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம். திருச்சி:பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் 

பல்வேறு பகுதிகளில் யூனிட்டி மார்ச் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தேசிய தலைமை முடிவு 

செய்துள்ளது .










அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் திருச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 

வருகின்ற 17.02.13 அன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி 

ஆழ்வார் தோப்பில் நடந்த மெகாபோன் பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம்.

Saturday, February 2, 2013

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் SDPI கட்சி நடத்திய மது ஒழிப்பு பேரணி


திருச்சி : தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி ஜனவரி 30 அன்று SDPI கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக மாணவர்கள் பங்குபெற்ற மாபெரும் மது ஒழிப்பு பேரணி வெஸ்ட்ரி பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.


பேரணியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (CFI) மாநில துணை தலைவர் சாகுல் ஷஹித் துவக்கி வைத்தார் .இந்த பேரணியில் SDPI கட்சியின் மாநில செயலாளர்கள் K.S.இப்ராஹிம் மற்றும் நாஞ்சில் செய்யதலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .









திருச்சி மாவட்ட தலைவர் K.முபாரக் அலி தலைமை தாங்கினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா வாழ்த்துரை வழங்கினார் .மாவட்ட நிர்வாகிகள் ரஹ்மதுல்லாஹ் ,அப்துல் ரஹீம்,ரபிக் முஹம்மத் மற்றும் SDTU மாநில துணைத்தலைவர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பேரணியில் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.