Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Wednesday, August 29, 2012

கத்னா செய்யாவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்து!-ஆய்வில் தகவல்!

Decline in circumcisions could cost billionsவாஷிங்டன்:அமெரிக்காவில் கத்னா எனும் சுன்னத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஹெச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் pathology துறையில் துணை பேராசிரியராக பணியாற்றும் டாக்டர். ஆரான் தோபியான் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
கத்னா செய்யாததால் ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்காவில் 4 பில்லியனுக்கும் அதிகமான டாலர் தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள்: தைவான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்!

Taiwan minister says men should sit down to urinate
தைபே:ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தைவானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் கருத்து அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Tuesday, August 21, 2012

காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்...


எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் நான் இந்த பதிவு எழுதுவதால்  என் வேலைக்கே கூட ஆபத்து வரலாம்.மனித உரிமை ஆர்வலர்கள் இதை எடுத்து சென்றால் என் வேலைக்கு ஆப்பு என்பது தெரிந்தே எழுதுகிறேன்... ஒரு புரிதலுக்காக எடுத்து கொள்ளுங்கள்....


எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான்.2001 முதல்  2004 வரை புல்வாமா  மாவட்டத்தில் வேலை.எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது.

ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக  கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை.காணவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானிற்கு ஆயுத பயிற்சி எடுக்க சென்று விட்டதாக சொல்லலாம்.அது குறித்து விசாரிக்க இவன் கொண்டு வரபட்டிருந்தான்.

                                 பொதுவாக விசாரணைகள் G செல் என்ற ஒரு திக்கான தகர ரூமில் வைத்து நடத்தப்படும்.கதவுகள் அடைக்கபட்டே இருக்கும்.அந்த வாலிபனுக்கும் அதே ரூமில் விசாரணை.சிரித்த முகத்துடன் நாம் தப்பு செய்யவில்லை என்ற தைரியமும்,படபடப்புமாக இருந்தான்.அவனுக்கு காவலாக நான்.
                                எனது காவல் முடியும் வரை யாரும் விசாரிக்க வர வில்லை.கை விலங்கு இடப்பட்ட நிலையில் சாப்பாடு கொடுக்கும்போதும் இயற்கை அழைப்பின் போதும் மட்டுமே விலங்குகள் அவிழ்த்து விடப்பட்டன.
                                   விசாரணை என்பதை விட அது அந்த ஊரில் வாழும் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.ரயில்வேயில் ஒரு கருப்பு நிற தொலைபேசி இருக்குமே அதுதான் இங்கு படு பயங்கரமான ஆயுதமே.அதில் டயல் செய்ய சுற்றும்போது சிறிய அளவில் மின்சாரம் உண்டாகும்.அந்த போனோடு இணைக்கப்பட்ட வயர்கள் அந்த வாலிபனின் ஆணுறுப்பில் இணைக்கப்பட்டது.இப்பொழுது டயல் செய்யும் ஒவ்வொரு முறையும் அவன் ஆணுறுப்பில் பாயும் மின்சாரம் கொடுக்கும் மரண வேதனையை சற்று கற்பனை செய்யுங்கள்.மல வாயில் மிளகாய்த்தூள் இடபட்டதா என்று தெரியவில்லை.ஆனால் அதுவும் நடப்பதுண்டு.


                                  அடுத்த நாளில் நான் வேறு காவலுக்கு சென்ற படியால் மாலை மட்டுமே பார்க்க முடிந்தது.மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.நடக்க முடியாமல் நடந்தான்.அன்று மாலை கமாண்டன்ட் விசாரிப்பதாக அவர் பங்குக்கு வதை செய்தார்.கதவு திறக்கும்போது சார் ஒரே ஒரு தடவை நான் சொல்றதை கேளுங்க என்றபோது நீ சொல்லி நான் கேட்கணுமா என்று முகத்தில் விடப்பட்ட ஒரு அறையில் மூலையில் போய் விழுந்தான்.அழுதுகொண்டே இருந்தான்.ஆறுதலாக பேசி சாப்பாடு கொடுத்து அமைதி செய்தேன்.படிப்பு பற்றி பேசியபோது எனது படிப்புக்காக  INGOU வின் PROSPECTUS வாங்கி தருவதாக உறுதி அளித்தான்.
                               அடுத்த நாள் அவனை விடுதலை செய்தபோது நடக்கமுடியாமல் நடந்து சென்றான்.அவன் வீட்டிலிருந்து பெற்றோர் வந்திருந்தனர்.அவன் அம்மா அழுத அழுகை மறக்கமுடியாதது.அவன் அழுத அழுகையை விட உக்கிரமாக அழுதபடி அழைத்து சென்றனர்.
                                     நான் என் சகாவிடம் நாம் ஒருவனை தீவிரவாதியாக்குகிறோம் என்ற போது அவன் அதற்க்கு இனிமே அந்த ஊரில் எவனும் பாகிஸ்தான் போக மாட்டான்.போனாலும் போகும் முன்னாடி இன்னொருத்தன் நமக்கு சேதி தந்திடுவான் .அதுக்குதான் இந்த அதிர்ச்சி முறை என்றான்.
                                       சில நாட்கள் கழித்து  அந்த வாலிபன் நான் வாயிலில் காவல் பார்க்கும்போது INGOU  PROSPECTUSகொண்டு வந்து கொடுத்தான்.மேலும் அவன் இதை கொடுக்க பலமுறை வந்ததாகவும் வேறு முகங்களை கண்டு பயந்து திரும்பி விட்டதாகவும் சொன்னான்.அவன் ஊரில் ரோந்து பணிக்கு வந்த என்னை பார்த்ததாகவும் சொன்னான்.நீ அப்பவே என்னிடம் பேசி இத கொடுத்திருக்கலாமே என்றேன்.நீங்க மறுபடியும் பிடிச்சிட்டு போய்ட்டா?சொல்லிவிட்டு சென்று விட்டான்.மறுபடி ஒரு நாளும் பார்க்க வாய்ப்புகள் அமையவில்லை.ஆனால் மறக்க முடியாதவன்.



                                   காஷ்மீர் என்றாலே தீவிரவாதம்  முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு?

டிஸ்கி:  பொது மக்களுக்கு பாதுகாப்பை மனதில்  உணர வைக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு ஆப்ரேசனின் குறிக்கோளாகும்.அது  நடப்பதில்லை என்பதும் மாறாக பயமும் வெறுப்பும் தோன்றுகிறது என்பது  கசப்பான உண்மை.

http://tamilmottu.blogspot.in/2012/05/blog-post.html

Monday, August 13, 2012

மியான்மர் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் சென்னை ஐ நா அலுவலகத்தில் பாப்புலர் ப்ரண்ட் மனு


 மியான்மரில் நடைபெற்றுவரும் முஸ்லிம்களின் இனப்படுகொலை மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப்  இந்தியா தெரிவித்துள்ளது.


கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் முஸ்லிம் இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது . இருபதாயிரம் முஸ்லிம்கள் புத்த தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர் .

கிட்டத்தட்ட எட்டாவது நூற்றாண்டிலிருந்து அங்கு வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு  குடிஉரிமை  உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அகதிகளை விட மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் அவர்களை நாடற்றவர்களாக ஆக்கியுள்ளது .

யார் வந்தேறிகள்?

யார் வந்தேறிகள்
அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.
நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு பெற்றதாக இல்லை. அஸ்ஸாம் மற்றுமொரு குஜராத்தா இல்லை அதை விட மோசமானதா? என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை ஏறத்தாழ நூறு பேர் மரணித்துவிட்டனர். நான்கு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.

Wednesday, August 8, 2012

எகிப்து:தாக்குதலின் பின்னணியில் மொஸாத் – இஃவானுல் முஸ்லிமீன், ஹமாஸ் குற்றச்சாட்டு!

Muslim Brotherhood blames Mossad for Sinai border attacks
கெய்ரோ/காஸ்ஸா:எகிப்து-காஸ்ஸா எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலின் பின்னணியில் மொஸாத் செயல்பட்டுள்ளதாக இஃவானுல் முஸ்லிமீன் குற்றம் சாட்டியுள்ளது. இத்தாக்குதல் எகிப்தின் புரட்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடந்துள்ளதாக இஃவான் கூறியுள்ளது.
எகிப்து-காஸ்ஸா எல்லைப் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்16 பேர் கொல்லப்பட்டனர். காஸ்ஸாவில் இருந்து ஊடுருவிய ஜிஹாதி குழுதான் இத்தாக்குதலை நடத்தியதாக எகிப்தின் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சியான மெனா கூறியது. ஆனால், இதனை மறுத்துள்ள காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா, இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

சர்வதேச AL- குத்ஸ் தினம்



Thursday, August 2, 2012

புனே குண்டுவெடிப்பு:டிஃபன் பாக்ஸை எடுத்துச் சென்ற தயானந்த் பாட்டீல் கைது!

Dayanand Patil being taken to Kamala Nehru Hospital for full body scan
புனே:மஹராஷ்ட்ரா மாநிலம் புனே நகரத்தை நேற்று பீதியில்ஆழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் டிஃபன்ஸ் பாக்ஸில் வெடிக்குண்டை எடுத்துச் சென்றபொழுது வெடித்ததால் காயமுற்று சிகிட்சை பெற்றுவரும் உள்ளூர் டெய்லரான தயானந்த் பாட்டீல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புனேயில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்லி மகராஜ் சாலையையொட்டிய பகுதியில் நேற்றிரவு, நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், புனே நகரமே அதிர்ச்சிக்கு உள்ளானது. பாலகந்தர்வா கலையரங்கம், சினிமா தியேட்டர் மற்றும் தேனா வங்கி அருகிலும், கார்வாரே சவுக் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வரிசையாக சக்தி குறைந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், குப்பைத் தொட்டியில் ஒரு குண்டும், சைக்கிள் கேரியரில் ஒரு குண்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

புனேயில் மலேகான் மாதிரி தொடர் குண்டுவெடிப்பு! – இருவர் காயம்!

Four explosions rock Pune
புனே:மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுசீல்குமார் ஷிண்டேயின் வருகைக்கு சற்று முன்பு புனேயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏழு நிமிடங்களுக்கு இடையே நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதர 3 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கப்பட்டன.
பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.