Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Wednesday, December 28, 2011

அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாகநபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின்மீதும்மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன்அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம்.عن ابى هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم من كان يؤمن بالله و اليوم الآخر فلا يؤذ جاره
இந்த ஹதீஸில் ஒரு முஸ்லின் தன்அண்டைவீட்டருடன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைகுறித்து பேசுகிறதுஇது போன்ற இன்னும் சில ஹதீஸ்களும் மிக விரிவாகவே விளக்கியுள்ளது.


பத்ஹுல்பாரி என்ற புஹாரி ஷரீபின் விளக்க உரையில் அதன் ஆசிரியரானஇமாம் அஸ்கலானி அவர்கள் இந்த ஹதீஸ் இன்னும் இது போன்ற தொடர்ஹதீஸ் (யார் அல்லாஹ்வின் மீதும்மறுமைநாள் மீதும் நம்பிக்கைகொண்டுள்ளாரோஎன்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஹதீஸ்குறித்து பேசும் போது ஒர் அழகிய செய்தியை பதிவு செய்துள்ளார்கள் :

அல்லாஹ்வையும்மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்ளுதல் என்பதன் கருத்து முழுமையான ஈமான் கொள்ளுதல் என்பதையே குறிக்கும்ஆனால்இங்கு அல்லாஹ்மறுமைநாள் மட்டும் குறிப்பாக கூறப்பட்டுள்ளதுஇதன்கருத்து ஆரம்பமும் (அல்லாஹ்கடைசியுமான (மறுமைநாள்),அல்லாஹ்தான் ஆரம்பத்தில் மனிதனை படைத்தவன் இன்னும் மறுமையில்  இந்த  ஹதீஸில்  சொல்லப்பட்ட குணநலனுக்கும் தீர்ப்பு வழங்குபவனும் அவனே".

உடன் இருப்பவர்களுக்குதான் ஒரு மனிதனின் உண்மையான குணநலன்விளங்கும் ஆகையால் தான் ஒரு மனிதன் தன் அண்டைவீட்டாரோடு உள்ளஉறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என இஸ்லாம்வலியுறுத்துகிறது.

அண்டைவீட்டார் முஸ்லிமாக இருப்பினும்அல்லது மாற்று மதத்தைசார்ந்தவராக இருப்பினும் அவர்களுடன் நடந்துகொள்ளவேண்டியமுறையில் ஒரே நிலையையே இஸ்லாம் கடைபிடிக்கிறது.

ஒரு முறை நபிகள் கூறினார்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்என்னிடம் பக்கத்து வீட்டுக்காரரின் கடமைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்நான் நினைத்தேன்அனந்தர சொத்து(வாரிஸ் உரிமையிலும்பங்குக்குஅவர்களுக்கும்  பங்குதாரராக ஆகிவிடுவார்களோ என்று எண்ணுமளவிற்க்கு.

ஒரு முறை ஒரு நபித்தோழர் நபி அவர்களிடம் வந்து ஒருவர்பக்கத்துவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்றுஅருமைநபிகள் இப்படி பதில் சொன்னார்கள்:

1. அவர் உன்னிடம் கடன்கேட்டால் கொடுப்பாயாக

2. அவர் உதவி தேடினால் உதவி செய்வாயாக

3. நோயுற்றால் விசாரிப்பீராக

4. அவருக்கு தேவை ஏற்பட்டால் கொடுப்பாயாக

5. ஏழ்நிலை அடைந்தால் உதவி புரிவீராக.

6. அவர் வீட்டில் நலவு நிகழ்ந்தால் சந்தோசத்தில் பங்கேற்பீராக.

7. சோகம் நிகழ்ந்தல் வருத்ததில் பங்கேற்பீராக.

8. மரணம் நிகழ்ந்தால் அதில் பின் தொடர்ந்து சென்று அதில் முழுமையாகபங்கேற்பீராக.

9.அவருக்கு காற்று தடைபடும் வண்ணம்  உன் வீட்டினை உயர்த்தாதே , அவர்அனுமதிதால் பரவாயில்லை.

10. பழங்கள் வாங்கி வந்தால் அவர்களுக்கும் கொடுப்பாயாக

11. அப்படி கொடுக்கிற அளவிற்க்கு வாங்கி வராமல் இருந்தால்உங்கள்குழந்தையிடம் அந்த பழங்களைக்கொடுத்து வெளியில் அனுப்பாமல்இருப்பாயாக. ( அடுத்த வீட்டு குழந்தைகள் பார்த்து ஏக்கம் ஏற்படால்இருப்பதற்க்கு).


பக்கத்துவீடு என்பதைக்கொண்டு வெறும் பக்கத்து வீடு என்பது மட்டுமல்ல,துபாய் போன்ற நாடுகளில் டபுள்காட்டில் தங்கியிருப்பவர்கள் மேல்கட்டிலிருப்பவருக்கும்கீழ் கட்டிலில் இருப்பவருக்கும் இது ரொம்பவேபொருந்தும்.

இன்றய சென்னை போன்ற நகரங்களின் பக்கத்து வீட்டாருடன் எவ்விதஉறவும் இல்லாத நிலைஇன்னும் சிலர் பக்கத்து வீட்டர் யார்என்றுதெரியாது என்று சொல்வதையும் அந்தஸ்து என்று நினைக்கிற காலமிது.

இன்று அண்டைநாடுகளிடம் உறவைகளை மேம்படுத்த வேண்டும்என்று பேசுகிற நாடுகள் கூடஅடுத்த நாடுகளை நோக்கியே தங்கள்ஏவுகணைகளை  நிறுத்திவைத்திருப்பது வேடிக்கையிலும் உண்மை.

தனிமனித நிலை மாறுபடாதவரை சமூக உறவுகள் மாறாது என்றஅடிப்படையில்ஒரு கட்டுக்கோப்பான சமூகம் கட்டமைக்கப்பட தனிமனிதநிலை மாறவேண்டும் என்ற அடிப்படையில் முதலில் பக்கத்து வீட்டார்உறவுகள் பேணப்பட்வேண்டும் என்ற இஸ்லாமிய நாதம் எத்துணைநடைமுறைப்படுத்தவேண்டிய உண்மை என்றும் புரிகிறது.

பக்கத்து வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன்நம்மை சார்ந்தவன் அல்ல என்ற நபிமொழியும்,

நிறைவான இபாதத்திருந்தும் பக்கத்து வீட்டாருக்கு நோவினை செய்ததால்நரகம் சென்றவர்களையும்குறைவான இபாதத்திருந்தும்பக்கத்துவீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர் சுவனம்சென்றதான நபிகளாரின் வாக்குநம் வாழ்விற்க்கு பொன்னால்பொறிக்கவேண்டிய வாசகம் அன்றோ.....


பேராஹஸனீ

No comments:

Post a Comment