Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Wednesday, March 21, 2012

இந்தியாவில் வாழ போராடும் இஸ்ரேல் பெண் எழுத்தாளர் : பரபரப்பு தகவல்கள்




கோழிக்கோடு :  அடிப்படைவாத குழுக்களோடு தொடர்பு இருப்பதாக கேரள காவல்துறையால் சந்தேகிக்கப்பட்டு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட இங்கிலாந்தில் பிறந்த இஸ்ரேலிய பெண் எழுத்தாளர் சூசன் நாதன் தன்னை மகாத்மா பிறந்த மண்ணில் வாழ அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சூசனின் வக்கீல் ராஜ் “இந்தியாவில் தங்கி வாழ அனுமதிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். மாறாக திரும்ப சென்றால் கேரள காவல்துறையின் அறிக்கையால் தம்முடைய நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறார். என்று கூறுகிறார். அவரின் விசா முடிந்து விட்டதால் வெளியேற உத்தரவிட்டது தவறு என்று கூறிய அவரின் வக்கீல் அவரின் விசா முடியவில்லை என்றும் கூறினார்.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறும் போது இத்துணை காலம் நிம்மதியாக இருந்த சூசனுக்கு அவரின் “இஸ்ரேலின் இன்னொரு பக்கம்” புத்தகத்தை கோழிக்கோடில் உள்ள பதிப்பகம் மொழிபெயர்த்து வெளியிட திட்டமிட்டே போதே தொடங்கியது என்று கூறப்படுகிறது. அப்பதிப்பகமும் அப்புத்தகத்தை மொழிபெயர்த்த டாக்டர். அப்துல்லா மனாமாவும் சிமி என்று சொல்லப்படும் தடை செய்யப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதாலேயே இப்பிரச்னை கிளப்பப்படுவதாக தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment