15 Nov 2011

நியூயார்க்:ஈரான் மீது அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு அந்நாட்டில் வாழும் 85 சதவீத மக்களும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 15 சதவீத மக்கள் மட்டுமே ஈரானின் மீது தாக்குதல் நடத்த ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்காவின் தொலைக்காட்சி-ரேடியோ ஏஜன்சியான சி.பி.எஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது.
ஈரானுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். ஈரான் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் அல்ல என பத்தில் எட்டு அமெரிக்கர்களும் நம்புவதாக சி.பி.எஸ் ஆய்வு கூறுகிறது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை வெளிவந்து சில தினங்களுக்குள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
thanks
www.thoothuonline.com
No comments:
Post a Comment