Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Tuesday, October 2, 2012

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

OCT 02:திருச்சி பாலக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மது விலக்கை அமல்படுத்து ! டாஸ்மாக்கை இழுத்து மூடு! மாபெரும்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில்  மாவட்ட தலைவர் K முபாரக் அலி நிகழ்சிக்கு வருகை தந்த அனைவரையும்  வரவேற்று உ ரையாற்றினார்கள்.எஸ்.டி.பி.ஐ யின் மாநில செயலாளர்  G .அப்துல் சத்தார் அவர்களும் A கமருதீன் BABL மக்கள் மையம் ஒருங்கிணைப்பாளர் அவர்களும்   மதுவின் தீமைகள்   குறித்தும் அதனால் தமிழகம் எந்த அளவிற்கு  கலாச்சாரம் சீர்குலைவையும் தனி மனித வாழ்வு அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதையும் விரிவாக விலக்கி.சிறப்புரையாற்றினார்கள் .

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் S S ரஹமதுல்லாஹ் தொகுத்து வழங்கினார் .மாவட்ட துணை தலைவர் S சம்சுதீன் மற்றும் பொது செயலாளர் X  ஜான் போஸ்கோ அவர்கள் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது .







                       



மேலும்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்  . S .அமீர் பாஷா அவர்களும் கேம்பஸ்  ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் ,நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட்  மாவட்ட   தலைவி மெஹராஜ் பானு மற்றும் எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற தொகுதி தலைவர்கள்,  SDPI கிளை உறுப்பினர்கள்  மற்றும் திரளான பெண்கள் மற்றும்  குழந்தைகளும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர் .போராட்டத்தில் இடையில் மது விலக்கை அமல்படுத்து  !டாஸ்மாக்கை இழுத்து மூடு !ஆகிய பல்வேறு கோசங்கள் எழுப்பட்டன .

-- 

No comments:

Post a Comment