31 Oct 2011

புதுடெல்லி:குஜ்ஜார்களுடனான மோதலின் பெயரால் போலீஸாரால் 10 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பரதபூரில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்கான இறுதிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களது போராட்டத்தை டெல்லிக்கு மாற்றியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக வருகிற செவ்வாய்க்கிழமை(நாளை) ராஜ்காட்டிலிருந்து பேரணி நடத்தப்படும். இச்சம்பவத்திற்கு காரணமான ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்திதரிவாலை மாற்றும் வரை போலீஸாரால் கொலைக்களமான மஸ்ஜிதை சுத்தப்படுத்தவோ,தொழுகை நிறைவேற்றவோ செய்யமாட்டோம் என முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.